பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தினமும் எண்ணாத வகையில் அதிகரித்து மக்களுக்கு இன்னல்களை ஏற்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் இன்று சென்னையில் நேற்றைய விலையை விட பெட்ரோல் லிட்டருக்கு 30காசுகளும், டீசல் லிட்டருக்கு 24 காசுகளும் அதிகரித்து விற்கப்படுகிறது.
ஏழை எளிய மக்கள் மற்றும் நடுத்தர மக்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு. இதன் விலை அதிகரிப்பு பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலையிலும் பிரதிபலிக்கிறது. இந்த விலை உயர்வை கண்டித்து மக்கள் மற்றும் பல தரப்பினரும், பல்வேறு கட்சியினரும் பல நூதன போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். அதாவது சைக்கிள் ஓட்டியும், மாட்டு வண்டிகள் ஓட்டியும் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் அதன் விலை குறைந்தபாடில்லை.
மேலும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் நிர்ணயிக்கின்றனர். கூடுதலாக மத்திய அரசின் வரி விதிப்பு சேர்ந்து விடுகிறது. அந்த வகையில் இன்று தமிழக தலைநகரில் பெட்ரோல் மற்றும் டீசல் நேற்றைய விலையை விட முறையே லிட்டருக்கு 30காசுகள் மற்றும் 24 காசுகள் அதிகரித்து உள்ளது. அதன்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.67க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.39க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமல்படுத்தப்பட்டு உள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்