கடந்த சில நாட்களாக கேரளாவில் குறைந்த கொரோனா தொற்று தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் வார இறுதி நாட்களில் அங்கு முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக குறைந்த கொரோனா தொற்று தற்போது சில மாநிலங்களில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டதால் இந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் குறிப்பாக சட்டீஸ்கர், கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.
இந்த மாநில அரசுகளும் தொற்று பரவலை தடுக்க பல்வேறு முயற்சிகள் எடுத்தாலும் தற்போது ஊரடங்கு ஒன்றே சிறந்த தீர்வாக உள்ளது. எனவே ஊரடங்கை கூடுமான வரை தீவிரப்படுத்தும் பணிகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. தற்போது கேரளாவில் நோய் தடுப்பு நடவடிக்கையாக வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் வணிக நிறுவனங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் இயங்க அனுமதி மறுக்கபட்டுள்ளது. தனியார் போக்குவரத்து சேவை இந்த இரண்டு நாட்களில் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு பயணம் செய்ய கேரளாவில் அனுமதிக்கப்படுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்