“அட கொடுமையே” யூடுயூப் பார்த்து போதை பொருட்களை தயாரிக்கும் இளைஞர்கள் – உயிர்க்கு ஆபத்தை ஏற்படுத்துமாம்!!!

0
"அட கொடுமையே" யூடுயூப் பார்த்து போதை பொருட்களை தயாரிக்கும் இளைஞர்கள் - உயிர்க்கு ஆபத்தை ஏற்படுத்துமாம்!!!

யூடுயூப் வலைத்தளம் மூலம் மக்கள் அனைவரும் அனைத்தையும் கண்டு மகிழ்கின்றனர். அதேபோல் சமையல் செய்வது மற்றும் பலவற்றை யூடுயூப் வாயிலாக அறிந்துகொள்கிறார்கள். நல்லதை மட்டும் அறிந்துகொள்ளாமல் சிலர் யூடுயூப் மூலம் தவறான பாதையிலும் செல்கிறார்கள். இந்நிலையில் கோவையை சேர்ந்த இளைஞர்கள் யூடுயூப் பார்த்து போதை பொருளை தயாரிக்கின்றனர். அந்த இளைஞர்களின் வீடியோ வெளியாகியுள்ளது.

யூடுயூப் பார்த்து போதை பொருட்களை தயாரிக்கும் இளைஞர்கள்

கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவியுள்ளது. இதன் காரணமாக ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இந்த ஊரடங்காள் மக்கள் பலரும் பாதிப்படைந்துள்ளனர், மக்களை விட அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் குடிமகன்கள் தான். ஊரடங்காள் கடைகள் மற்றும் நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. டாஸ்மாக் அனைத்தும் மூடின, இதனால் குடிமகன்கள் அதிகளவில் மன உளைச்சலுக்கு ஆளாகினர்கள். ஒரு சிலர் மது இல்லாததால் பைத்தியம் பிடித்தது போல் இருந்தார்கள், ஒரு சிலர் மதுவிற்கு பதிலாக மற்ற போதை பொருட்களை பயன்படுத்த தொடங்கினர். மற்றும் சிலர் அவர்களே சொந்த தயாரிப்பில் மது மற்றும் போதை பொருட்களை தயாரிக்க ஆரம்பித்தனர். இந்நிலையில் ஒரு சில மாவட்டங்களில் டாஸ்மாக் திறக்காத நிலை இருப்பதால் மது இல்லாததால் போதைக்காக கோவை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் யூடுயூப் சேனலை பார்த்து போதை பொருட்களை எப்படி செய்வது என்று அறிந்துகொண்டு. அதேபோல் அவர்களும் போதைப்பொருளை தயாரித்துள்ளனர். மருந்துக்கடைகளில் மருந்து மாத்திரைகளை அதிகளவில் விலை கொடுத்து வாங்குகின்றார்கள். பின் அதனை யூடுயூபில் பார்த்தது போல் தயாரிக்கிறார்கள்.

யூடுயூப் பார்த்து போதை பொருட்களை தயாரிக்கும் இளைஞர்கள்
யூடுயூப் பார்த்து போதை பொருட்களை தயாரிக்கும் இளைஞர்கள்

பின் தயாரித்த போதை மருந்துகளை ஊசி மூலமாக தன உடம்பில் செலுத்திக்கொள்கிறார்கள், அப்படி அவர்கள் செய்யும் வீடியோ மற்றும் போட்டோக்கள் சில இணையத்தில் கசிந்துள்ளது. இதை பார்த்த சமூக ஆர்வலர்கள் மற்றும் மருத்துவர்களை பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மருத்துவர்கள் சிலர் அறிவுரை கூறியுள்ளனர். அதாவது இதுபோல் செயலில் ஈடுபட்டு போதை மருந்துகளை உடலில் செலுத்திக்கொண்டாள் பக்க விளைவுகள் ஏற்படும். அதுமட்டுமில்லாமல் உயிரை பறிக்கும் நிலைமை கூட ஏற்படலாம் எனவே இதுபோல் செய்வதை தவிர்க்க வேண்டும் மற்றும் மருந்துக்கடைகளில் மருந்து மாத்திரைகளை விற்கும் விற்பனை முறையை சரி செய்ய வேண்டும். போதையினால் ஏற்படும் விளைவுகள் உணர வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here