நம்ம ஊரு.. நம்ம கெத்து… ஆரம்பமாகிறது 5வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர்!!!

0

தமிழ்நாடு பிரீமியர் லீக் எனப்படும் டி.என்.பி.எல். இன் ஐந்தாவது கிரிக்கெட் தொடர் வருகிற ஜூலை 19 ஆம் தேதி தொடங்கவிருக்கிறது. தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் இதனால் குஷியில் உள்ளனர்.  இதற்க்கான போட்டி அட்டவணை தற்போது வெளியிடப்பட்டு உள்ளது.

மொத்தமாக எட்டு அணிகள் பங்கேற்கும் ஐந்தாவது டி.என்.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் ஜூலை 19 ஆம் தேதி முதல் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடக்க உள்ளது. இதற்கு முன்பு நெல்லை, திண்டுக்கல், கோவை, சேலம் ஆகிய இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டது. தற்போது போட்டி நடத்தும் இடங்கள் தமிழக அரசும் ஒப்புதல் உடன் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

தொடக்க ஆட்டத்தில் கோவை கிங்ஸ் அணி, சேலம் ஸ்பார்டன்சுடன் மோதுகிறது. ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி வரை இந்த கிரிக்கெட் தொடர் நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு பார்வையாளர்கள் இன்றி அரசின் முறையான பாதுகாப்பு விதிமுறைகளுக்குட்பட்டு நடத்துவதற்கு தமிழ் நாடு மாநில அரசு கிரிக்கெட் வாரியத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here