கொரோனா மூன்றாம் அலை இந்தியாவை தாக்க இன்னும் 8 மாதங்களாகும் என மத்திய அரசின் சிறப்பு குழு கணித்துள்ளது.
கொரோனா இரண்டாம் அலை ஓய்ந்துள்ள நிலையில் தற்போது மூன்றாம் அலையின் பயம் மக்கள் மனதில் எழுந்துள்ளது. மாநில அரசுகள் கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்கும்மாறு நீதிமன்றங்கள் அறிவுறுத்தியுள்ளன. இன்னும் சில மாதங்களில் கொரோனாவின் மூன்றாம் அலை இந்தியாவைத் தாக்கலாம் என நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள்.
மே மாத காலத்தில் இந்தியாவில் இரண்டாம் அலையின் உச்சமாக நாள் ஒன்றுக்கு நான்கு லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். பின்னர் கடுமையான ஊரடங்கு மற்றும் கொரோனா தடுப்பூசி காரணமாக இந்த தொற்று பரவல் தற்போது குறைந்துள்ளது. உருமாற்றம் அடைந்த டெல்டா வைரஸ் தான் திரிபு இந்த இரண்டாம் அலையை பெரிதும் ஏற்படுத்தியது.
இந்நிலையில் மத்திய அரசின் சிறப்பு குழு கொரோனா மூன்றாம் அலை இந்தியாவை தாக்க எட்டு மாதங்கள் ஆகும் என்று கணித்துள்ளது. மேலும் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டால் பெரிய பாதிப்பு இருக்காது என சிறப்பு குழுவின் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்