நாடு முழுவதும் 7 வது ஊதியக்குழு பரிந்துரை கீழ் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசை தொடர்ந்து பல்வேறு மாநில அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி 46 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதைத்தொடர்ந்து 2024 ஜனவரி மாதம் அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் 7 வது ஊதியக்குழுவின் படி அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டும் போது அகவிலைப்படி தொகை நேரடியாக அடிப்படை ஊதியத்தில் சேர்க்கப்பட்டு பூஜ்ஜியமாக்கப்படும் என தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி ரூ.18,000 அடிப்படை ஊதியம் வாங்குபவர்களுக்கு 2024 ஜனவரி முதல் ரூ.27,000 அடிப்படை ஊதியமாக கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது. இருந்தாலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ முடிவுகள் மத்திய அரசே தீர்மானிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
TNPSC தேர்வாணையத்துக்கு இனி இவர் தான் செயலர்.., வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!