சென்னையில் பார்க்கிங் உதவியாளர் பணிக்காக இன்ஜினியரிங் பட்டதாரிகள் அதிகளவில் விண்ணப்பித்து இருப்பது தமிழகத்தில் நிலவும் வேலையில்லா திண்டாட்டத்தை தெளிவாக காட்டுகிறது.
70% இன்ஜினியரிங் பட்டதாரிகள்..!
சென்னை மாநகரத்தில் டிஜிட்டல் முறையில் அண்ணாநகர், நுங்கம்பாக்கம், புரசைவாக்கம் உள்பட முக்கியமான பகுதிகளில் பார்க்கிங் வசதி ஏற்படுத்தவும், மொபைல் ஆப் மூலம் வாகன ஓட்டிகள் தங்களுக்கு பார்க்கிங்கில் இடம் உள்ளதா என தெரிந்து கொள்ளும் முறையிலும் வசதிகள் செய்யப்பட உள்ளது. இந்த பணிக்காக பார்க்கிங் உதவியாளர் வேலைக்கு 1400 பேர் விண்ணப்பித்து உள்ளனர். அவர்களில் 70% பேர் இன்ஜினியரிங் பட்டதாரிகள் ஆவர்.
வேறு வேலை கிடைக்கவில்லை..!
பார்க்கிங் உதவியாளர் பணிக்கு பொதுவாக 10ம் வகுப்பு படித்தவர்கள் அல்லது ஓய்வு பெற்றவர்களே அதிகமாக விண்ணப்பிப்பர். ஆனால் இந்த பணிக்கு இன்ஜினியரிங் பட்டதாரிகள் அதிகளவில் விண்ணப்பித்து இருப்பது தமிழகத்தில் நிலவும் வேலையில்லா திண்டாட்டத்தை வெளிப்படுத்துகிறது. இன்ஜினியரிங் பட்டதாரிகள் வேறு வேலை கிடைக்காமல் இதற்கு விண்ணப்பித்து உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |