நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் ஒன்றாக வாட்ஸ்அப் செயலி உள்ளது. ஆனால் இந்த வாட்ஸ்அப் செயலியில் மக்களுக்கு எவ்வளவு நன்மைகள் உள்ளதோ அதை விட பல மடங்கு தீமைகள் தீமைகளும் உள்ளது. ஆனால் அது நாம் பயன்படுத்தும் முறையில் தான் இருக்கிறது. சமீபத்தில் கூட வாட்ஸ்அப் செயலி மூலம் பல்வேறு மோசடிகள் நடப்பதால் பயனர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மெட்டா நிறுவனம் அறிவித்தது.
தற்போது இதைத் தொடர்ந்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது நாடு முழுவதும் வாட்ஸ் அப் செயலியை பலரும் தவறாக பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த கணக்குகளை முடக்கும் படி புகார்களும் வந்த வண்ணம் உள்ளது. இதனால் மோசடியில் ஈடுபட்டு வந்த வாட்ஸ்அப் கணக்குகளை புதிய IT விதி 2021 இன் படி 9,936, 000 கணக்கு முடக்கப்பட்டுள்ளனர். எனவே இனிவரும் நாட்களிலும் வாட்ஸ்அப் கணக்குகளை தவறாக பயன்படுத்தினால் அவர்களது கணக்கும் முடக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.