நாடு முழுவதும் பல இளைஞர்கள் படித்துவிட்டு வேலை இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் பல தனியார் நிறுவனங்கள் வேலை வாய்ப்பு பற்றிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் தேவனஹல்லியில் 300 ஏக்கர் நிலப் பரப்பளவில் பாக்ஸ்கான் தொழிற்சாலை கட்டப்பட்டு வருகிறது. இதற்காக பாக்ஸ்கான் நிறுவனம் ஏற்கனவே ரூ.800 கோடி முதலீடு செய்திருந்த நிலையில் தற்போது கூடுதலாக 14,000 கோடி முதலீடு செய்துள்ளனர்.
இந்நிலையில் இந்த தொழிற்சாலைக்கான பணிகள் அனைத்தும் முடிவடைந்தவுடன் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஐபோன் உற்பத்திக்கான பணிகள் அனைத்தும் தொடங்க இருப்பதாக தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே இந்த நிறுவனத்தில் கிட்டத்தட்ட 50,000 பேருக்கு மேல் வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது குறித்து தெளிவான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகவும் வாய்ப்பு உள்ளது.