சமீபத்தில் விதிகளை பின்பற்றாமல் கரூர் மாவட்டத்தில் கல்குவாரிகள் செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அனுமதியின்றி செயல்பட்ட அந்த குவாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மதுரை ஐகோர்ட்டுக்கு விசாரணைக்கு வந்த நிலையில், புவியியல் மற்றும் சுரங்கத்துறை செயலாளர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் கரூர் மாவட்டத்தில் விதிகளை பின்பற்றாத 31 கல்குவாரிகளின் செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பு விளக்கம் அளித்துள்ளது.