கர்நாடகா மாநிலத்தில் பூ விற்று வாழ்க்கை நடத்தி வரும் வியாபாரியின் மனைவி வங்கிக்கணக்கில் ரூ. 30 கோடி பணம் வரவு வைக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த வங்கி மற்றும் வருமானவரித்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆன்லைன் சேலைக்கு கார் பரிசு..!
வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்
கர்நாடக மாநிலத்தின் சன்னபட்னா பகுதியை சேர்ந்தவர் பூ வியாபாரி மாலிக் புர்கான். இவரது மனைவி ராகியம்மாள் இருவரும் சேர்ந்து சந்தையில் பூ வியாபாரம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இவரது வீட்டிற்கு வந்த வங்கி அதிகாரிகள் அவரது மனைவியின் வங்கிக்கணக்கில் மிக பெரிய தொகை வரவு வந்து உள்ளதாக தெரிவித்து விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
வங்கிக்கணக்கில் 30 கோடி ரூபாய் வரவு வந்தது குறித்து தெரியாத பூ வியாபாரி விசாரணையில் தன்னுடைய மனைவி ஆன்லைனில் சேலை வாங்கியதாகவும், அதற்கு பரிசாக கார் அளிப்பதாக கூறி சிலர் அவரின் வங்கிக்கணக்கு விபரத்தை வாங்கியதாகவும் தெரிவித்தார். இது குறித்து விசாரித்த அதிகாரிகளுக்கு அவரது வாங்கிக்கணக்கை சில மர்ம நபர்கள் பயன்படுத்தியது தெரியவந்தது. எனவே இது குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |