நாடு முழுவதும் 2000 ரூபாய் நோட்டை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்து இருந்தது. அதன்படி அனைத்து வங்கிகளிலும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டது. 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய ஆரம்பத்தில் ஆர்வம் குறைந்த அளவில் இருந்தாலும், நாட்கள் கடக்க கடக்க பணி வேகம் எடுக்க தொடங்கியது. இதற்கான கால அவகாசம் செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிய உள்ளதாக அறிவுறுத்தி உள்ளனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதற்கு இன்னும் ஒரு மாத காலங்களே உள்ள நிலையில், 88 சதவீதம் 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப்பெற்றுள்ளதாக அண்மையில் அறிக்கை வெளியானதாக கூறப்படுகிறது. இதில் சாமானிய மக்களை காட்டிலும், தொழிலதிபர்கள் அதிகமாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். எனவே இதுவரை 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றாதவர்கள் விரைந்து வங்கிகளில் மாற்றிக்கொள்ளுங்கள்.
வங்கி பயனர்கள் கவனத்திற்கு., பணம் எடுக்க போறீங்களா? அப்போ உங்களுக்கு தான் இந்த ஷாக் நியூஸ்!!