நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி பல்வேறு ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில் தேர்தல் கமிஷனராக இருந்த அனுப் சந்திர பாண்டே,, கடந்த மாதம் ஓய்வு பெற்றார். அவரை தொடர்ந்து மற்றொரு தேர்தல் கமிஷனர் அருண் கோயலும் திடீரென ராஜினாமா செய்தார். இதனால் 2 தேர்தல் கமிஷனர்-களை, உடனடியாக நியமிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு வரும் 13 ஆம் தேதிக்குள் 5 அதிகாரிகள் கொண்ட 2 உத்தேச பட்டியலை தயாரிக்க இருப்பதாக டெல்லி வட்டாரங்களில் தெரிவித்துள்ளனர். பின்னர் 14 ஆம் தேதிக்குள் பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோரிடம் தேர்வுக்குழு சமர்ப்பிக்கும். அதன்படி உத்தேச பட்டியலில் இருந்து 2 தேர்தல் கமிஷனர்களை ஜனாதிபதி 15-ந் தேதிக்குள் நியமிப்பார் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
மஞ்சுமெல் பாய்ஸ் இயக்குனர் மீது பாலியல் புகார் அளித்த பிரபல நடிகை.. வெளியான அதிர்ச்சி தகவல்!!