மதுரையில் மது விற்பனை அமோகம் – தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.178 கோடிக்கு மது விற்பனை..!

0
தமிழகம் முழுவதும் கடந்த 11ம் தேதி சனிக்கிழமை மட்டும் 178 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஒரே நாளில் மது விற்பனை அமோகம்..!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த மாதம் ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் அதற்கு முந்தைய நாளான சனிக்கிழமை வழக்கத்தை விட மது விற்பனை அதிகமாக நடைபெற்றுள்ளது. ஊரடங்கு நாளில் தங்களுக்கு தேவையான மதுபான வகைகளை நேற்று முன்தினமே மதுப்பிரியர்கள் மொத்தமாக வாங்கிச் சென்றனர்.

சென்னையில் வரும் 16ம் தேதிக்குள் 50% கட்டணம் செலுத்த காலக்கெடு – தனியார் பள்ளி நிர்வாகம் உத்தரவு..!

இதில் அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் 40 கோடி ரூபாயும், திருச்சி மண்டலத்தில் 39 கோடி ரூபாயும், சேலம் மண்டலத்தில் 37 கோடி ரூபாயும் விற்பனையாகியுள்ளன. கோவை மண்டலத்தில் 36 கோடி ரூபாயும் சென்னையை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் 21 கோடி ரூபாய் என மொத்தமாக கடந்த சனிக்கிழமை மட்டும் 178 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 1 வாரத்தை ஒப்பிடுகையில் 9 கோடி ரூபாய் அதிகமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here