தடை செய்யப்பட்ட சீன செயலியான டிக்டாக் தனது தலைமையிடத்தை மாற்றுவது குறித்து நிர்வாகிகள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
டிக்டாக் நிறுவனம் ..!
சீனாவை தலைமையிடமாக கொண்ட சீனா நிறுவனமான டிக்டாக் செயலியை பல்வேறு நாடுகள் பயன்படுத்தி வந்தன. இந்தியாவில் லடாக் பகுதயில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக டிக்டாக் உட்பட 59 சீன செயலிகளை மத்திய அரசு தடை விதித்தது. இதேபோல் அமெரிக்காவும் கொரோனா வைரஸை உலகம் முழுவதும் பரவுவதற்கு சீனா தான் காரணம் என கூறி வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் டிக்டாக் செயலிக்கு தடை விதித்துள்ளார்.
மதுரையில் மது விற்பனை அமோகம் – தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.178 கோடிக்கு மது விற்பனை..!
இந்நிலையில் டிக்டாக் செயலியின் உரிமையாளரான bytedance நிறுவனம் சீனாவுடன் தனது தொடர்பை துண்டிக்க திட்டமிட்டுள்ளது. டிக்டாக் நிறுவனம் ஏற்கனவே லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க், லண்டன்,டப்ளின், சிங்கப்பூர் ஆகிய ஐந்து நகரங்களில் அலுவலகங்களை கொண்டுள்ளது. வெளியேறி இந்த 5 நகரங்களில் ஏதேனும் ஒன்றில் bytedance நிறுவனம் தனது தலைமை அலுவலகத்தை நிறுவுவதற்கு ஆலோசித்து வருகிறது.