தமிழகத்தை பொறுத்த வரையில், 2023-2024 ஆம் கல்வி ஆண்டுக்கான 10 ஆம் வகுப்பு பொது தேர்வு வரும் மார்ச் 26 ஆம் தேதி முதல் ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதை போல, ஒவ்வொரு மாநிலத்திலும் நடப்பு ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு முன்கூட்டியே பள்ளி மாணவர்களுக்கான பொதுத் தேர்வை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அந்த வகையில், பஞ்சாப் மாநிலத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு வரும் பிப்ரவரி 13ம் தேதி தொடங்கி மார்ச் 6 ஆம் தேதி முடிவடைய உள்ளது. ஆனால், மாணவர்கள் தேர்வுக்கு தயாராக குறுகிய காலமே உள்ளதால் பஞ்சாப் மாநில ஆசிரியர்கள், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை மார்ச் 1ஆம் தேதி முதல் தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.