பள்ளிகளில் தொடரும் தற்கொலைகள் – கையை அறுத்து மாடியில் இருந்து குதித்த பத்தாம் வகுப்பு மாணவி!

0
பள்ளிகளில் தொடரும் தற்கொலைகள் - கையை அறுத்து மாடியில் இருந்து குதித்த பத்தாம் வகுப்பு மாணவி!
பள்ளிகளில் தொடரும் தற்கொலைகள் - கையை அறுத்து மாடியில் இருந்து குதித்த பத்தாம் வகுப்பு மாணவி!

சமீப காலமாக பள்ளி மாணவர்கள் தற்கொலைக்கு முயலும் சம்பவம் அதிகம் நடைபெற்று வருகிறது. தற்போது பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் கையை அறுத்துக்கொண்டு மாடியில் இருந்து குதித்துள்ளார்.

தற்கொலை:

கடந்த இரண்டு மாதங்களாக பள்ளி மாணவர்கள் தற்கொலை செய்யும் சம்பவம் அனைவரையும் பதைபதைக்க வைத்து வருகிறது. அதன் வரிசையில் கள்ளக்குறிச்சி மற்றும் திருவள்ளுவர் மாவட்டம் விவகாரம் இன்னும் முடிந்த பாடு இல்லை. இந்த இக்கட்டான சூழ்நிலை மாறாமல் இருக்கும் நிலையில் தற்போது அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்த மாணவி மற்றும் தனியார் பள்ளியில் படித்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள அரசு பள்ளியில் சமூக அறிவியல் தேர்வு நடக்க இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சரியாக படிக்கவில்லை என்று மாணவி ஒருவர் பள்ளி கழிப்பறைக்கு சென்று முதலில் கையை அறுத்து உள்ளார். அதை பார்த்த சக மாணவிகள் ஆசிரியரிடம் கூற செல்ல அந்த தருணத்தில் அந்த மாணவி அங்கிருந்து ஓடி பள்ளியின் இரண்டாவது தளத்தில் இருந்து குதித்துள்ளார், ஆனால் நல்ல வேளையாக உயிர் தப்பியுள்ளார். அதே நேரத்தில் அப்பள்ளிக்கு அருகில் உள்ள தனியார் பள்ளியில் பயின்ற பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் விஷம் அருந்தி உள்ளது கேள்விக்குறியாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here