கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதிகளவு பரவி வருகிறது. இந்த வைரஸ் பரவலால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது,இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளிய வர முடியாமல் இருக்கின்றனர் கொரோனா பாதிப்பில் தமிழகம் 5-வது இடத்தில் உள்ளது. மக்கள் அனைவரும் பொருளாதார ரீதியால் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு 14 வகையான தொழிலார்களுக்கு கொரோனா நிவாரண உதவியாக ரூ.86 கோடி நிதி ஒதுக்கீடு.
14 வகையான தொழிலாளர்களுக்கு நிதியுதவி
கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஏப்ரல் 15 முதல் இருந்த ஊரடங்கு 2ம் கட்டமாக மே 3 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.இதனால் மக்கள் வெளியே செல்ல முடியாமல் வீட்டிலேயே அடங்கியுள்ளனர்.மக்களின் நலனையும் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு அத்யாவசிய தேவைகளுக்கு தமிழக அரசு நிவாரணமும், சலுகைகளையும் அறிவித்து வருகிறது.
அந்த வகையில், மீனவர்கள், பட்டாசு தொழிலாளர்கள், திருநங்கை, சினிமா ஊழியர்கள் உள்ளிட்ட 14 வகையான தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே தெரிவித்து இருக்கிறது.அதற்கான அரசாணை வெளியிட்டப்பட்டு உள்ளது. அந்த அரசாணையில், வாரியத்தில் பதிவு செய்துள்ள 8.60 லட்சம் பேருக்கு ரூ.86 கோடி நிதி தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |