தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் அரசுத்துறைகளில் உள்ள காலியிடங்களை அவுட்சோர்சிங் முறையில் நிரப்பி வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கானாவில் TIMS, RIMS, மருத்துவ கல்லூரி மற்றும் பிற அரசு மருத்துவ நிறுவனங்களிலும் பிசியோதெரபிஸ்ட்கள், உதவி பேராசிரியர்கள், உதவியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் உள்ள 16,024 காலிப் பணியிடங்களை ஒப்பந்த மற்றும் அவுட்சோர்சிங் முறையில் நிரப்புவதற்கு, அம்மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
TNPSC குரூப் 4 தேர்வர்களே., தேர்வுக்கான Question Bank தொகுப்பு., அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!!
அதன்படி அவுட்சோர்சிங் முறையில் 9,684 பேரும், ஒப்பந்த அடிப்படையில் 4,013 பேரும், கௌரவ ஊதியத்தில் 2,322 பேரும், 5 பேர் MTS என நியமனம் செய்ய உள்ளனர். இவர்கள் 2024 ஏப்ரல் 1 முதல் 2025 மார்ச் 3 வரை ஓராண்டு காலத்திற்கு பணிபுரிவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.