நடிகர் விஷால், கார்த்திக்கு கொலை மிரட்டல் விடுத்த முக்கிய திரை பிரபலம் – போலீசில் அதிரடி புகார்!!

0

தென்னிந்திய நடிகர் சங்க பொறுப்பில் முக்கிய பொறுப்பை வகித்து வரும் விஷால், நாசர் மற்றும் கார்த்தி ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

போலீசில் புகார்:

தமிழ் சினிமாவின் நிர்வாக பொறுப்புகளை கவனிப்பதற்கு, தென்னிந்திய நடிகர் சங்கம் துவங்கப்பட்டது. இதற்கான தேர்தல் கடந்த 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. இதன் பாக்யராஜ் தலைமையிலான அணியும், நாசர் தலைமையிலான அணியும் போட்டியிட்டது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, கடந்த 3 மாதங்களுக்கு முன் நாசர் தலைமையிலான அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நடிகர் சங்கத்தில், பொதுச் செயலளாராக விஷாலும், பொருளாளராக கார்த்தியும், தலைவர் பதவியை  நாசரும் வகித்து வருகின்றனர். தற்போது, நடிகர் விஷால், கார்த்தி, நாசர் ஆகியோருக்கு அதே சங்கத்தைச் சார்ந்த ராஜதுரை என்பவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக  போலீசில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த செயல், தென்னிந்திய சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here