விஜயகாந்த் உருவாக்கிய தேமுதிக கட்சியில் அவர் வசம் இருக்கும் முக்கிய அதிகாரங்களை, மாற்றுவது குறித்து பேச்சு எழுந்திருப்பது அவரது தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தொண்டர்கள் அதிர்ச்சி :
நடிகர் விஜயகாந்த் திரைத்துறையில், தன் முத்திரையை பதித்ததோடு மட்டுமல்லாமல் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் தேமுதிக என்ற கட்சியை தொடங்கி, அரசியலிலும் களம் கண்டார். திராவிட கட்சிகளுக்கு, மிகப்பெரிய எதிர்க்கட்சியாக விளங்கிய இவர் தமிழக அரசியல் வரலாற்றில் தனக்கென தனி இடத்தை பிடித்தார். சமீப காலமாக உடல்நிலை சரியில்லாமல் ஓய்வில் இருந்து வரும் இவரால் கட்சி பணிகளை சரிவர கவனிக்க முடியவில்லை.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இவரது பெயரில், அவருடைய மனைவி மற்றும் மகன்கள் கட்சியை நிர்வகித்து வருகின்றனர். தற்போது கட்சியின் மொத்த அதிகாரத்தையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வர பலர் விரும்புவதாக தெரிகிறது.
அதனால், கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை மட்டும் விஜயகாந்த் வசம் விட்டு விட்டு, பிரேமலதாவை செயல் தலைவராக்க வேண்டும் என்றும், அவரது மகன் பிரபாகரனை இளைஞரணி தலைவராக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளது. ஆனால், இதையெல்லாம் பார்த்த தொண்டர்கள், கேப்டன் மீண்டும் வந்து அரசியல் பணிகளை தொடர்வார். அவர் அதிகாரங்களை மாற்ற வேண்டாம் என கோரிக்கை வைத்து வருவதாக சொல்லப்படுகிறது.