தற்போது உள்ளூர் போட்டிகளில் அடுத்ததாக விஜய் ஹசாரே கோப்பை நடைபெற உள்ளது. இதற்கான தமிழக அணியில் இந்தியா அணியின் வேக பந்து வீச்சாளர் நடராஜன் இடம்பெற்றுள்ளார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விஜய் ஹசாரே:
தற்போது சையது முஷ்டாக் அலி கோப்பைக்கு அடுத்ததாக விஜய் ஹசாரே ஒரு நாள் தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது. நடந்து முடிந்த சையது முஷ்டாக் அலி கோப்பையில் தமிழ்நாடு அணி கோப்பையை வென்று அசத்தியுள்ளது. விஜய் ஹசாரே தொடர் இந்த மாதம் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு ரஞ்சி கோப்பை நடத்தப்படமாட்டாது என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. தமிழக வீரரான நடராஜன் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான சுற்று மூலம் சர்வதேச போட்டிகளில் களமிறங்கினர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
அந்த தொடரில் நடராஜன் மிக அருமையாக தனது பங்களிப்பை அளித்துள்ளார். மேலும் தனது பந்துவீச்சு மூலம் ஆஸ்திரேலியா அணியினரை திணறடித்தார். ஆஸ்திரேலியா தொடர் முடிந்து நாடு திரும்பிய நடராஜனுக்கு அவரது ஊர் மக்கள் சிறப்பான வரவேற்பை அளித்தனர். வெள்ளை குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் இந்தியா தேசிய கோடியை ஏந்தியபடி வளம் வந்தார். தற்போது நடக்கப்போகும் விஜய் ஹசாரே தொடருக்கான தமிழ்நாடு அணியில் நடராஜன் இடம் பிடித்துள்ளார். பிசிசிஐ அனுமதி வழங்கினால் நடராஜன் இந்தத்தொடரில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#INDvsENG முதல் சென்னை டெஸ்ட் – உத்தேச 11 அணி வீரர்கள் விபரம்!!
தினேஷ் கார்த்திக்(C), அபராஜித், இந்திரஜித், அருண் கார்த்திக், ஹரி நிஷாந்த், ஷாருக் கான், ஜெகதீசன், சூரிய பிரகாஷ், கௌசிக் காந்தி, ஜே.கௌசிக், எம்.அஸ்வின், சாய் கிஷோர், சித்தார்த், சோனு யாதவ், விக்னேஷ், நடராஜன், அஸ்வின் கிரைஸ்ட், பிரதோஷ் ரஞ்சன் பால், பெரியசாமி, எம்.முகமத்.