கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் மக்களிடம் இருக்கும் தவறான புரிதலை களைய, வரலட்சுமி சரத்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
பல சினிமா பிரபலங்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள தங்கள் ரசிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். நடிகை நயன்தாரா சமீபத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டார். மேலும் நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், சோனியா அகர்வால் ஆகியோர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு போட்டோக்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தனர்.
தற்போது வரலட்சுமி வெளியிட்ட தடுப்பூசி விழிப்புணர்வு வீடியோவில் தானே இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். அதில் ஒரு வரலட்சுமி உங்கள் ஏரியாவில் நாளை தடுப்பூசி முகாம் நடத்துகிறார்களாம், மறக்காமல் தடுப்பூசி போட்டுக்கொள் என்று சொல்கிறார். அதற்கு மற்றொரு வரலட்சுமியோ, அய்யய்யோ நான் போட்டுக்க மாட்டேன். தடுப்பூசி போட்டால் நிறைய பக்க விளைவுகள் வருதாமே என்று பதில் கூறுகிறார்.
பிறகு கடந்த வாரம் உனக்கு பைக் விபத்து ஏற்பட்டது அல்லவா, எப்படி உயிருடன் இருக்க என்று ஒரு வரலட்சுமி கேட்க மற்றொருவரோ, ஹெல்மெட் போட்டிருந்ததால் பிழைத்தேன் என்றார். அதே மாதிரி தடுப்பூசி போட்டுக் கொண்டால் கொரோனாவில் இருந்து 100 சதவீதம் தப்பிக்க முடியாது. ஆனால் உயிரை காப்பாற்ற முடியும்.
தடுப்பூசி போட்டுக் கொண்ட யாருமே இதுவரை இறக்கவில்லை என்கிறார்.மற்றொருவரோ, ஆமாம், நீ சொல்வது சரி தான். நாளை போட்டுக்கிறன் என்று கூறுகிறார். பின்னர் வரலட்சுமி நான் தடுப்பூசி செலுத்திக்கொண்டேன் நீங்கள் செலுத்தி கொண்டிர்களா என்று கேட்ப்பதுடன் அந்த வீடியோ முடிகிறது.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!