பிரபல நடிகையும் பிக்பாஸ் பிரபலமுமான வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் சீசன் 7ல் கலந்து கொண்டு விளையாடி வருகிறார். இதனை தொடர்ந்து வனிதா பிக்பாஸ் விமர்சனம் செய்து வருகிறார். இந்நிலையில் வனிதா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் அதிர்ச்சி பதிவை வெளியிட்டுள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
அதில், வழக்கம் போல் வனிதா பிக்பாஸ் விமர்சனத்தை முடித்து விட்டு இரவு நேர சாப்பாட்டை சாப்பிட்டு கிளம்பும் போது மர்ம நபர் ஒருவர் பிரதீப்க்கா ரெட் கார்டு கொடுக்குறீங்க என்று கூறி கண் பகுதியில் தாக்கி தப்பி சென்றுள்ளார். அதன் பின்னர் அவருடைய தங்கையை வரவழைத்து போலீசில் புகார் கொடுத்தார். அடுத்த சில நாட்களுக்கு நான் ஆன் ஸ்க்ரீனில் வரப்போவதில்லை.என்று கூறி அதிர்ச்சி பதிவை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் வனிதாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
நேருக்கு நேர் மோதும் ரஜினி – கமல்.., எந்த விஷயத்திற்காக தெரியுமா? வெளியான முக்கிய தகவல்!!