இந்தியாவில் நீண்ட தூர ரயில் பயணங்களை மேற்கொள்ளும் பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை ரயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ரயில் பயணிகள் நவீன தொழில்நுட்ப வசதிகள் மட்டுமல்லாமல் அதிவிரைவு பயணங்களை மேற்கொள்ள “வந்தே பாரத்” ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டு பலர் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில் குறுகிய தூரம் பயணிக்கும் பயனாளிகளின் வசதிக்காக “வந்தே மெட்ரோ ரயில்” சேவையை அறிமுகப்படுத்த ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
இந்த சேவை 2024 ஜனவரி முதல் பயன்பாட்டுக்கு வர இருப்பதாக I.C.F. ரயில் பெட்டி தொழிற்சாலை அதிகாரி கூறியுள்ளார். இதில் விரைவு சேவை, ஏ/சி மற்றும் சொகுசு வசதிகள் உட்பட ஒரு பெட்டியில் 100 இருக்கைகள், 200 பேர் நின்று பயணிக்க கூடிய வகையில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்த பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.