இந்திய ரயில்வேயின் கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்பரேஷன் இணையதளத்தில் சமீபத்திய அறிவிப்பின்படி, இன்று ஏராளமான ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
IRCTC அறிவிப்பு:
தமிழகத்தில் அனைத்து மக்களும் குறைந்த கட்டணத்தில் பயணம் மேற்கொள்ள சிறந்த போக்குவரத்து சேவையாக ரயில் சேவைகள் உள்ளன. மேலும் ரயில் பயணத்தில் தான் படுத்துத் தூங்கிக்கொண்டு நிம்மதியாகப் பயணிக்க முடியும். இதனால் தான் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் ரயில் பயணத்தை விரும்புகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இருப்பினும் கொரோனா காலத்தில் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் ஏழை, எளிய மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இருப்பினும், அமலில் இருந்த கட்டுப்பாடுகள் சில மாதங்களுக்கு முன் நீக்கப்பட்டு உள்ளதால், அனைத்து ரயில் சேவைகளும் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. இந்நிலையில் ரயில்வே நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவது வழக்கம்.
அஜித்துக்காக விட்டுக்கொடுத்த விஜய்.., என்ன மனுசு தான் உங்களுக்கு.., கண்கலங்கிய ரசிகர்கள்!!
அந்த வகையில் தற்போது ரயில்வே செயல்பாடு மற்றும் பராமரிப்பு பணிகள் ஆகிய காரணங்களால் இன்று (அக்.,14) 144 ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக, இந்திய ரயில்வே அறிவித்துள்ளது..மேலும் 55 ரயில்கள் பகுதியளவு இயங்கும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் இன்று ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விவரங்களை தெரிந்து கொள்ள https://www.irctchelp.in/cancelled-trains-list/ என்ற லிங்கை கிளிக் செய்யலாம். பண்டிகைகள் நெருங்கி வரும் இந்த சமயத்தில் இப்படி ஒரே நாளில் 100 க்கும் அதிகமான ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டு இருப்பது பயணிகள் மத்தியில் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.