தமிழகத்தின் தற்போது அனைத்து மாவட்டங்களிலும் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் எடுத்து பெய்து வருகிறது. இந்நிலையில் கேரள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளின் அநேக இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
மேலும் நீலகிரி, தேனி, கோவை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய ஆறு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிக கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் உஷாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் நாள் முழுவதும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்ஸ்டாகிராம் பயனாளர்களுக்கு ஹேப்பி., இனி நேரடியாகவே ரீல்ஸை டவுன்லோட் செய்யலாம்? எப்படினு தெரியுமா?