TNPSC தேர்வாணையம் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை கடந்த வருடம் வெளியிட்டிருந்தது. மேலும் தேர்வும் நடந்து முடிந்த நிலையில் அதற்கான result மார்ச் மாதம் வெளியானது. தேர்வு முடிவுகளில் பல குளறுபடிகள் ஏற்பட்ட நிலையில் புகார்கள் எழுப்பப்பட்டது. மேலும் சமீபத்தில் சான்றிதல் பதிவிறக்கத்திற்கான அறிவிப்பை தேர்வாணையம் வெளியிட்டிருந்தது.
ஆனால் சான்றிதழில் அதிகப்படியான பிழைகள் இருப்பதால் தேர்வர்களுக்கு மேலும் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை TNPSC தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதாவது நாளை முதல் ஜூன் 7 ஆம் தேதி மாலை 5.45- குள் சான்றிதழை விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பிடப்பட்ட அந்த தேதிக்குள் பதிவேற்றம் செய்யவில்லை எனில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என தேர்வாணையம் தெரிவித்துள்ளது.