தமிழகத்தின் சென்னை உட்பட 4 மாவட்டங்களை தடம் புரட்டிய மிக்ஜாம் புயல் கரை ஒதுங்கிய நிலையில், அடுத்த 7 நாட்களுக்கான வானிலை அறிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதாவது, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத் தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல சுழற்சி உருவாகி உள்ளது. இந்த வானிலை மாற்றதால், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று (டிசம்பர் 9) முதல் டிசம்பர் 15 ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்த வரையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவுக்கு மேகமுட்டத்துடனே இருக்குமே தவிர, ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்றும் நாளையும் (டிசம்பர் 10) தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மணிக்கு 55 கிலோ மீட்டர் வரை சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் இந்த குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் கடலுக்கு செல்ல கூடாது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
2023 ஆம் ஆண்டை கலக்கிய டாப் திரைப்படங்கள் மற்றும் கனவு நாயகிகள்.., முதலிடம் இதற்கு தானா?