தமிழகத்தில் முடிவுக்கு வரும் வடகிழக்கு பருவ மழை…, வானிலை ஆய்வு மையம் கொடுத்த ஹிண்ட்!!

0
தமிழகத்தில் முடிவுக்கு வரும் வடகிழக்கு பருவ மழை..
தென்னிந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் முதல் பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையானது வரும் ஜனவரி 15ம் தேதியுடன் முடிவடைய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று (ஜனவரி 11) முதல் ஜனவரி 17 ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமானது வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஆனால், சென்னையை பொறுத்த வரையில் வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடனே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மன்னர் வளைகுடா, குமாரி கடல், மாலத்தீவு உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால், ஜனவரி 14 ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here