சம வேலைக்கு சம ஊதியம், நியமன தேர்வு ரத்து உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து கடந்த வாரம் முழுவதும் சென்னை நுங்கம்பாக்கத்தை மையமாக கொண்டு ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
அதாவது, தூத்துக்குடியில் உள்ள இடைநிலை ஆசிரியர்கள் சில கோரிக்கைகளை முன்னிறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி அளிக்குமாறு மதுரை உயர்நீதி மன்றத்திற்கு மனு அளித்துள்ளனர். இந்த மனுவை பரிசளித்த உயர் நீதிமன்றம், உண்ணாவிரத போராட்டத்திற்கு ஒரு நாள் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும், தனிநபரை தாக்கி பேசக்கூடாது என்றும் உரிய மருத்துவ வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
தமிழக மக்களே…, தாறுமாறாக எகிறும் காய்கறி பழங்களின் விலை…, ஒரு கிலோவே இவ்வளவா??