தமிழகத்தில் இனி TET தேர்வு இந்த முறையில் தான் நடக்கும்.., தேர்வு வாரியம் எடுத்த அதிரடி முடிவு!!!

0
தமிழகத்தில் இனி TET தேர்வு இந்த முறையில் தான் நடக்கும்.., தேர்வு வாரியம் எடுத்த அதிரடி முடிவு!!!
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தகுதி வாய்ந்த ஆசிரியர்களின் பணியமர்த்த TRB TET தேர்வு வாரியம் பல்வேறு போட்டித் தேர்வுகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது. தற்போது இதை தொடர்ந்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதாவது இப்போது TET தேர்வுகளில் தொடர்ந்து பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு கொண்டே உள்ளது.
இதனால் தேர்வர்களிடையே கடும் குழப்பம் நிலவுகிறது. மேலும் 1 முதல் 8ம் வகுப்பு வரை பணியாற்றும் ஆசிரியர்கள் கட்டாயம் TET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் உள்ளது. இந்நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வை மீண்டும் பழைய முறை நடத்த தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. அதன்படி இனி டெட் தேர்வு மீண்டும் OMR சீட் மூலம் நடைபெறும் என தெரிவித்துள்ளனர். மேலும் ஜூலை மாதம் நடைபெற உள்ள டெட் தேர்வில் நடைமுறைக்கு கொண்டு வர இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here