நாடு முழுவதும் நடைபெற்று வரும், தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் தமிழகத்தில் 67% பேருந்துகள் இயக்கவில்லை என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
Public place-ல் பீஸ்ட் நாயகி பூஜாவை விடாமல் தொல்லை செய்த மர்ம நபர்., பதிலுக்கு என்ன செஞ்சாங்கன்னு பாருங்களே!
மக்கள் அவதி:
மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் உள்ள தொழிற்சங்கங்கள் தொடர்ந்து 2 நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்திருந்தனர். இந்த போராட்டம் இன்று காலை 6 மணிக்கு தொடங்கியது. இந்த வேலை நிறுத்தத்தில் சிஐடியு, ஏஐடியுசி, யூடியூசி உள்ளிட்ட பல தொழிற்சங்கங்கள் கலந்து கொண்டுள்ளன. பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரரை வார்ப்பதை எதிர்த்தல், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துதல், பெட்ரோலிய பொருட்கள் மீதான விலை உயர்வு உள்ளிட்ட 12 கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
இந்த போராட்டத்தால், தமிழகம் முழுவதும் காலை முதல் 67% பேருந்துகள் இயங்கவில்லை என மாநில போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. இதனால், பொது மக்களின் அன்றாட வாழ்க்கை ஸ்தம்பித்து போய் உள்ளது. ஏற்கனவே, அரசு சார்பில் இந்த போராட்டத்தில் பங்கேற்க கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், ஊழியர்களின் இந்த போராட்டத்தால், மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்