மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட சேதம் காரணமாக சென்னை, செங்கல்பட்டு உள்பட 4 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த நிலையில் பெரும்பாலான பகுதிகளில் தேங்கி இருந்த மழை நீர் அகற்றப்பட்டு வருவதால், இன்று (டிச.8) இரவு அல்லது நாளைக்குள் அனைத்து பள்ளிகளும் சீரமைக்கப்பட்டு விடும் என தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உறுதி அளித்துள்ளார்.
இதனால் திங்கட்கிழமை (டிச.11) அனைத்து பள்ளி, கல்லூரிகளும் வழக்கம்போல் செயல்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் நாளை (டிச. 9) சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகளும் திறக்கக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
மிக்ஜாம் புயலால் உங்க சான்றிதழ் சேதமடைந்துவிட்டதா?? தமிழக தலைமை செயலாளர் சொன்ன தகவல்!!!