தமிழக பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை…, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!

0

சென்னை பள்ளி, கல்லூரி மாணவர்களே…, இந்த நாளும் உங்களுக்கு விடுமுறை…., வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

தமிழகத்தின் வங்கக் கடல் பகுதியில் உருவான மிக்ஜாம் புயல் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு கடந்த டிசம்பர் 4ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டது.
நேற்று இந்த புயல் தமிழகத்தை விட்டு ஆந்திராவை நோக்கி நகர்ந்தது. இருப்பினும், தமிழகத்தில் இந்த மிக்ஜாம் புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதால், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது, இன்னும் இயல்பு நிலைக்கு சென்னை திரும்பாத நிலையில், நாளையும் (டிசம்பர் 7) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here