தொடர்ந்து மாறி வரும் பருவ நிலை மாற்றத்தால், நகரின் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த வகையில், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இன்றும் (செப்டம்பர் 4) மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதில், குறிப்பாக தென் தமிழக கடற்கரை பகுதிகளில் 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இதனால், தென் தமிழக கடற்கரை பகுதியான ராமேஸ்வரத்தில் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மீன் வளத்துறை வெளியிட்ட அறிக்கையில், அடுத்த அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல கூடாது என எச்சரித்துள்ளது. இதற்கிடையில், சமீபத்தில் தான் ராமேஸ்வரத்தின் மீன்பிடி துறைமுகப் பகுதியில் 200 மீட்டர் அளவுக்கு கடல் உள்வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக மக்களே உஷார்., அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் கொட்டப்போகும் கனமழை., வானிலை மையம் பகீர்!!