மஞ்சுமெல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் மீது மோசடி வழக்கு.. வெளியான அதிர்ச்சி தகவல்!!
கடந்த 4 மாதங்களில் வெளியான மலையாளத் திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பிரம்மாண்ட வெற்றியை பெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த பிப்ரவரி 22ம் தேதி வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் ரசிகர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலிலும் சாதனை படைத்துள்ளது.
இந்த நிலையில், தற்போது மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் தயாரிப்பாளர்கள் மீது மோசடி வழக்கு பதிவாகியுள்ளது. அதாவது மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்பட தயாரிப்பாளர்கள் ரூ.7 கோடி மோசடி செய்ததாக துறவூர் பகுதியைச் சேர்ந்த சிராஜ் என்பவர் வழக்கு தொடுத்துள்ளார். மேலும் சிராஜிடம் ஏமாற்றி ரூ.7 கோடி வாங்கிவிட்டு, பணத்தையோ, லாபத்தையோ வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
சமந்தாவை தொடர்ந்து அரிய வியாதியால் அவதிப்படும் பிரபல நடிகை.. வெளியான அதிர்ச்சி தகவல்!!