தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டால் பெரும்பாலானோர் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து தற்கொலை செய்து வருகின்றனர். இதையடுத்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கு தடை சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றியது. இருந்தாலும் இச்சட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற அதிர்ஷ்டத்திற்கான விளையாட்டின் தடை செல்லாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில் மதுரையை சேர்ந்த ஆசிரியர் சரவணன் என்பவர் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு மூலம் ரூ.8 லட்சம் பணத்தை இழந்து ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதற்கு கவலை தெரிவித்த பா.ம.க. தலைவர் அன்புமணி கூறுகையில், “ஆன்லைன் சூதாட்ட தடை நீக்கப்பட்ட 2 மாதங்களில் ஒரு ஆசிரியர் உயிரிழந்து இருப்பது அரசு உற்று நோக்க வேண்டியவை. எனவே தடை சட்டம் விவகாரத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யப்போகிறதா? என்பதை விளக்கமளிக்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
கேப்டன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிக்பாஸ் பூர்ணிமா… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!