![மகளிர் உரிமை தொகை..., இன்னும் 2 நாள் தான்..., பெறாதவர்களுக்கு சூப்பர் அப்டேட்..., வெளியான முக்கிய தகவல்!! மகளிர் உரிமை தொகை..., இன்னும் 2 நாள் தான்..., பெறாதவர்களுக்கு சூப்பர் அப்டேட்..., வெளியான முக்கிய தகவல்!!](https://enewz.in/wp-content/uploads/2023/10/fff-mz.jpg)
தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் உரிமை தொகையாக ரூ. 1000 வழங்கும் திட்டத்தை முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். சுமார் 1 கோடி 60 லட்சத்துக்கு மேற்பட்டோர் இந்த உரிமை தொகை பெற விண்ணப்பித்த நிலையில், 55 லட்சத்திற்கு மேற்பட்டோரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, நிராகரிக்கப்பட்ட காரணம் அறிந்து மேல்முறையீடு செய்யவும் அரசு வழிவகை செய்திருந்தது.
Enewz Tamil WhatsApp Channel
இதன் மூலம், கடந்த மாதம் வராத பலருக்கும் இந்த அக்டோபர் மாதத்தில் இருந்து மகளிர் உரிமை தொகை ரூ. 1000 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், அக்டோபர் 14 ஆம் தேதியை இத்திட்டத்தின் பயனாளர்களுக்கு ரூ. 1000 வங்கி கணக்கில் செலுத்தப்படும் என அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி இருந்தது. மேலும், கடந்த முறை போல மினிமம் பேலன்ஸ் இல்லாதவர்களிடம் இருந்து, அரசு அளிக்கும் இந்த ரூ. 1000-த்தை வங்கி எடுத்து கொள்ளாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை இந்த மூன்று மாவட்டத்தில் கனமழை பிச்சு உதற போகிறது.., சென்னை வானிலை மையம் தகவல்!!