தமிழ்நாடு அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்களை கொண்டு நியமிக்க அண்மையில் பள்ளி கல்வித்துறை அறிவித்து இருந்தது. அதன் அடிப்படையில் நடப்பு கல்வியாண்டில் தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை பள்ளி மேலாண்மை குழு பணி நியமனம் செய்தது. இந்த நிலையில் இந்த ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் ஒழுங்காக வழங்கப்படுவதில்லை என புகார் எழுந்த வண்ணம் உள்ளது. பள்ளிகள் திறந்து 3 மாதங்கள் கடந்த நிலையிலும் இதுவரை தொகுப்பூதியம் வழங்கப்படாததால், தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்து வருகின்றனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், “ஒரு சில மாவட்டங்களில் தற்காலிக ஆசிரியர் பெயர் பட்டியலை தயாரிக்க தாமதம் ஆனதால், இந்த பிரச்சனை ஏற்பட்டிருக்கலாம். இருந்தாலும் இந்த புகார் தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். ” என தகவல் தெரிவித்துள்ளனர்.
தமிழக பள்ளி மாணவர்களே.., உங்களுக்கு இந்த லீவு கட்.., வெளியான அதிரடி அறிவிப்பு!!!