தமிழகத்தில் இன்றும், நாளையும் 4500 பேருந்துகள் இயங்கும் என தமிழக அரசு அறிவிப்பு !!!

0

தமிழகத்தில் வருகிற திங்கள் கிழமை உடன் ஊரடங்கு நடவடிக்கை முடிவுக்கு வரவுள்ள நிலையில் தற்போது இதனை ஒரு வாரம் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் இன்று, நாளை 4500 பேருந்துகள் இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது .

பேருந்துகள் இயங்கும்:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தீவிரம் காரணமாக கடந்த மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. இந்நிலையில் இந்த ஊரடங்கு நாளை மறுநாள் காலை 4 மணி உடன் முடிவுக்கு வரும் நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மருத்துவ வல்லுநர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதில் அனைத்து உறுப்பினர்கள் மற்றும் மருத்துவர்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று தெரிவித்தனர். தற்போது இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதன் காரணமாக வெளியூர் செல்பவர்கள் நலன் கருதி இன்றும் நாளையும் அனைத்து தனியார் மற்றும் அரசு பேருந்துகள் இயங்கும். பகலில் மட்டும் அல்லாது இரவிலும் இன்றும் நாளையும் அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்கும் என தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. வெளியூர் செல்லும் பயணிகளின் நலன் கருதி இன்றும், நாளையும் தனியார் மற்றும் 4,500 சிறப்பு பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here