தமிழகத்தில் பண்டிகை உள்ளிட்ட கொண்டாட்ட தினங்களில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி பல்வேறு நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நாளை மறுநாள் (டிச.25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால், கன்னியாகுமரி மாவட்டத்தில் குற்ற நடவடிக்கைகளை தடுக்க போலீசார் பல்வேறு குழுக்களாக அமைக்கப்பட்டுள்ளதாக DSP E.சுந்தரவதனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், “பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர், பைக் சாகசம் (Racing) செய்பவர் ஆகியோர்களை கைது செய்து வழக்கு பதிவு செய்யப்படும். மேலும் அவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்படும் என எச்சரித்துள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
பயணிகளுக்கு ஷாக்கிங் நியூஸ்.., ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு உயர்வு!!