தமிழகத்தில் இப்போது கிறிஸ்துமஸ், புத்தாண்டு இதைத் தொடர்ந்து பொங்கல் பண்டிகையும் கொண்டாடப்பட உள்ளது. மேலும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு முடிந்த நிலையில் தேர்வுக்கான விடுமுறை ஜனவரி 2ஆம் தேதி வரை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக பண்டிகையை கொண்டாடுவதற்காக பொதுமக்கள் எல்லாரும் தங்களது சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் தமிழக அரசு பேருந்துகளில் கூட்டம் அலைமோதுகிறது.
![](https://enewz.in/wp-content/uploads/2023/12/1-rtgf-1024x770.jpg)
மக்களின் சிரமத்தை போக்கும் வகையில் ஆம்னி பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த ஆம்னி பேருந்துகள் பண்டிகை காலங்களை சாக்காக வைத்துக் கொண்டு டிக்கெட் விலையை பல மடங்கு உயர்த்தி விடுகின்றனர். இந்நிலையில் இப்போது கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்லும் மக்கள் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.