தமிழகத்தில் கடந்த மார்ச் 26 ஆம் தேதி தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்றுடன் முடிவடைய உள்ளது. இத்தேர்வினை தமிழகம் முழுவதும் சுமார் 9.1 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். இதையடுத்து பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி வரும் ஏப்ரல் 12ஆம் தேதி முதல் தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்வு தாள் திருத்தும் பணி ஏப்ரல் 22 ஆம் தேதி முடிவடையும் நிலையில் மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகள் முடிந்து திட்டமிட்டபடி மே 10ம் தேதி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
வங்கிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை.., முன்கூட்டியே வெளியான முக்கிய அறிவிப்பு!!