உலகப்புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி மாத விசேஷ பூஜை சிறப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் அனுதினமும் தரிசனத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர். அதிலும் வார இறுதி நாட்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதோடு, பார்க்கிங்கில் இடமில்லாமல் வாகனங்கள் சாலையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
இதனை கருத்தில் கொண்டு திருப்பதி தேவஸ்தானம் முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதாவது புரட்டாசி மாத சனி, ஞாயிறு கிழமைகளான அக்டோபர் 1, 7, 8, 14 மற்றும் 15 ஆகிய தினங்களில் ஸ்லாட் சர்வ தரிசனத்திற்கு (எஸ்எஸ்டி) டோக்கன் வழங்கப்பட மாட்டாது என அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் “வந்தே பாரத்” ரயில் சேவை., கதறும் பயணிகள்? முழு விவரம் உள்ளே!!!