உலகப்பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கிரிவலம் செல்ல மாதந்தோறும் பௌர்ணமி, அமாவாசை ஆகிய தினங்களில் திரளான பக்தர்கள் வருவது வழக்கம். அந்த வகையில் இன்று (டிச.26) மார்கழி மாத பௌர்ணமி என்பதால் உள்ளூர் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் எண்ணற்ற பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Enewz Tamil WhatsApp Channel
இதனை கருத்தில் கொண்டு சென்னையில் இருந்து அதிநவீன இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட 20 குளிர்சாதன பேருந்து திருவண்ணாமலைக்கு இயக்க இருப்பதாக அரசு விரைவு போக்குவரத்துக்கழக இயக்குனர் இளங்கோவன் தெரிவித்துள்ளார். இந்த சிறப்பு பேருந்துகளுக்கு www.tnstc.in என்ற இணையத்தளத்திலோ அல்லது TNSTC செயலியிலோ முன்பதிவு செய்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 9445014452, 9445014424 என்ற தொலைபேசி எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தி உள்ளனர்.
தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்களே., இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை., குஷியான அறிவிப்பு!!!