இந்தியாவைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாகவும், இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனக் ஆகியோரும் பதவி வகித்து வரும் நிலையில் மீண்டும் ஒரு தமிழர் சிங்கப்பூர் நாட்டில் முக்கியப் பொறுப்பு வகிக்க இருக்கிறார். அதாவது, யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாக கொண்ட தமிழரான தா்மன் சண்முகரத்னம் இன்று (செப்டம்பர் 14) சிங்கப்பூரின் அதிபராக பதவியேற்றுள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதாவது, சிங்கப்பூரின் 8 ஆவது அதிபர் ஹலீமா யாகூபின் பதவிக்காலம் முடிவுற்றதையடுத்து புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இம்மாதம் 1 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் 17.46 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றியடைந்த தா்மன் சண்முகரத்னம் இன்று சிங்கப்பூரின் 9 ஆவது அதிபராக பொறுப்பேற்றுள்ளார்.