தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக, கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டிருந்த மாணவர்களுக்கான உடற்கல்வி வகுப்புகள், மீண்டும் தொடங்கப்படும் என பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
தனது இரண்டாம் தரத்தின் மகள், பேத்தி உடன் அவுட்டிங் சென்ற சரத்குமார் – மனுஷன் வாழறாரு பாருங்களே!!
அரசு உத்தரவு:
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக, பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டது. கடந்த சில தினங்களாக, தொற்று குறைந்து வந்ததால் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அதுபோல 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வைரஸ் பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட உடற்கல்வி வகுப்புகள் மீண்டும் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வி ஆணையம் வெளியிட்ட செய்தி குறிப்பில், தமிழகத்தில் உள்ள 6 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு உடற்கல்வி வகுப்புகள் நடத்த அனுமதி வழங்கப்படும் எனவும், 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வுக்கு தயாராகி வருவதால் அவர்களுக்கு உடற்கல்வி வகுப்புகள் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்