தமிழகத்தில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, அடுத்த மாதம் ஏப்ரல் 8 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதைத்தொடர்ந்து 1 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான முழு ஆண்டு தேர்வு எப்போது? என மாணவர்கள் உள்ளிட்ட பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த சூழலில் தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு, ஒரே கட்டமாக வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதற்காக ஏப்ரல் 15ஆம் தேதி முதலே, அனைத்து பள்ளிகளிலும் ஓட்டுச்சாவடி பணிகள் மேற்கொள்ள வேண்டும். இதனை கருத்தில் கொண்டு ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்புகளுக்கான ஆண்டு இறுதி தேர்வுகளை, ஏப்ரல் 13ம் தேதிக்குள் நடத்தி முடிக்க, தமிழக பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டு உள்ளது. இது தொடர்பாக அதிகாரிகளுடன் இன்று (மார்ச் 18) ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
2024 TET தாள் 1 & தாள் 2 தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமா? உடனே மிஸ் பண்ணாம அப்ளை பண்ணுங்க!!!