தமிழகம் வருவோருக்கு இது கட்டாயம் – தொற்று பரவல் அதிகமானதால் மருத்துவத்துறை அதிரடி!!

0

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருவோர்க்கு, கண்டிப்பாக ஏழு நாள் தனிமை அவசியம் என தமிழக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மருத்துவத்துறை அறிவிப்பு :

இந்தியாவின் பல மாநிலங்களில் ஓமைக்ரான் தொற்று தீவிரம் எடுத்து வருகிறது. இதனால் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும், கூட்டமாக கூடி பண்டிகைகள் கொண்டாடவும் பலவித கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழக அரசு வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

இதில், வருகிற (26.12.2021)முதல் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருவோர்க்கு 7 நாட்கள் தனிமைப்படுத்தல் கட்டாயம் என தமிழக மருத்துவத்துறை அறிவித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 39 பேருக்கு தொற்று பரவலுக்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளதால், இந்த முறை பின்பற்றப்பட உள்ளதாக மருத்துவ துறை சார்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. இதனால், பலரும் அரசின் அடுத்தகட்ட நகர்வை தீவிரமாக கவனித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here